இந்நிலையில் இந்த முடிவை வரவேற்று பிரதமர் மோடிக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 30 சதவீத சம்பளக் குறைப்பு குறித்து அமைச்சரவை செய்த முடிவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘ஐந்து விதமான பரிந்துரைகளை’ அவர் முன்வைத்துள்ளார். அந்தப் பரிந்துரையில் அவர், “ரூ .20,000 கோடி செலவில் நடைபெற உள்ள "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தை நிறுத்தி வைக்கலாம். அதேபோல் அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்வதை நிறுத்தி வைக்கலாம். மேலும் அரசு வெளியிடும் விளம்பரங்களை நிறுத்தி வைக்கலாம்” எனக் கூறியுள்ளார்.