புதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை !

புதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை !

புதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை !
Published on

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நெகிழிக்குத் தடை விதிக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரி அரசு முடிவேடுத்துள்ளது.

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது


இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் நெகிழிக்குத் தடை விதித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com