கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ் ஆனார்.
நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 8 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.