சிங்கத்தை வேட்டையாடிய தம்பதி: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு

சிங்கத்தை வேட்டையாடிய தம்பதி: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு

சிங்கத்தை வேட்டையாடிய தம்பதி: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு
Published on

சிங்கத்தை வேட்டையாடிவிட்டு அதன் உடலுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த தம்பதிக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதியான டரேன் மற்றும் கரோலின் கார்டர் ஆகியோர் தெற்கு ஆப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் மிகப்பெரிய சிங்கம் ஒன்றை பொழுதுபோக்குக்காக வேட்டையாடியுள்ளனர். அதன்பிறகு சிங்கத்தின் உடல் அருகே அமர்ந்துகொண்டு கணவனும் மனைவியும் முத்தமிட்டுக்கொள்வது போல புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் ''கலாஹரி பாலைவனத்தில் கடின உழைப்பு. மிகப்பெரிய சிங்கம்'' என பதிவிட்டுள்ளார். 

(மாதிரிப்படம்)

சிங்கத்தை வேட்டையாடியதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் வேட்டையாடிய தம்பதிக்கும், சுற்றுலா ஏற்பாட்டாளருக்கும் எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த தம்பதி, எல்லாவற்றுக்கும் பதிலளிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகளின் தொடர் கேள்விக்கு பதிலளிக்க முடியாத தம்பதி தங்களது இன்ஸ்டா பக்கத்தை பிரைவேட் செய்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com