சத்தீஸ்கரில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்: நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்!!

சத்தீஸ்கரில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்: நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்!!

சத்தீஸ்கரில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்: நீண்ட வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள்!!
Published on

சத்தீஸ்கரில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

அத்துடன் இந்த தளர்வுகள் மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையும் எனவும் தெரிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்கள் சில தளர்வுகளை இன்று முதல் அறிவித்துள்ளன.

அதன்படி, சத்தீஸ்கரில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கால் மூடப்பட்ட மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டால் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். வரிசையில் வருவதற்கு ஏதுவாக மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com