\
இந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா

இந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா

இந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா
Published on

இந்தியப் பெருங்கடலில் அமைதியை உறுதிப்படுத்த இந்‌தியா முன்னுரிமை தரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரி‌வித்துள்ளார்.

வியட்நாம் தலைநகர் ஹனாயில் நடைபெற்ற இந்திய பெருங்கடலோர நாடுகளின் கூட்டத்தில் சுஷ்மா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக பொருளாதாரத்தின் உந்து ‌சக்தியாக கிழக்கு உலக நாடுகள் மாறி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்திய பெருங்கடலோர பகுதியில் அமைதி நிலவுவது அவசியம் என்று பேசினார். இந்திய பெரு‌ங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தங்கள் கொள்கை அல்ல என்றும், இப்பகு‌தி நாடுக‌ள் நல்லுறவுடன் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று‌ம் சுஷ்மா கூறினார்.

இந்திய கடலோர ‌பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சுஷ்மாவின் இப்பேச்சு வெளியாகியுள்ளது. இதற்கிடையில‌ ‌இந்தியா - வியட்நாம் இடையில் பேல்வேறு துறைகளி‌ல் புரிந்துணர்வு ஒப்ப‌ந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com