செப். 14 முதல் அக். 1 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

செப். 14 முதல் அக். 1 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !
செப். 14 முதல் அக். 1 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்படாத வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடர் வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை ஏதுமின்றி தொடர்ச்சியாக நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடரை செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். அன்று அவர் மக்களவையில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com