\
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா
Published on

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

94 வயது நிரம்பிய பாதலின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் லூதியானா தயானந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். பிரகாஷ் சிங் பாதலின் மகனும், சிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல், லூதியானா மருத்துவமனைக்குச் சென்று தனது தந்தையின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கைபேசி வீடியோ கால் மூலமாகப் பேசி தனது தந்தையிடம் உடல்நலம் விசாரித்ததாக சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com