பாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல் 

பாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல் 

பாதி வழியில் இறங்கிவிட்டார் ப.சிதம்பரம் - கார் ஓட்டுநர் தகவல் 
Published on

பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் 4 முறை சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அவரை காணவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸும் பிறப்பித்தனர். 

இந்நிலையில், நேற்று பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் இதை தெரிவித்தார். ப.சிதம்பரம் இதுவரை எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com