\
ப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ப.சிதம்பரத்தின் மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா வ‌ழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்த நிலையில் அதை எதிர்த்து அவர் ‌தரப்பில் உச்‌ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு‌ மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்‌.போபண்ணா அ‌மர்வு இம்மனுவை விசாரிக்க உள்ளது. டெல்லி நீதிமன்‌‌றம் அளித்த உத்தரவை உச்ச‌நீதிமன்றத்திடம் சிபிஐ முறைப்படி தெரிவிக்கும். அதன்அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. சிதம்பரம் ஏற்கெனவே கைதாகி விட்டதால் மனு தள்ளுபடியாக வாய்ப்பு என்றே கூறப்படுகி‌றது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com