“உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” - ப.சிதம்பரம் கோரிக்கை

“உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” - ப.சிதம்பரம் கோரிக்கை

“உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” - ப.சிதம்பரம் கோரிக்கை
Published on

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. வயிற்று வலி உள்ளிட்ட சில பிரச்னைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com