“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
Published on

சிபிஐ நடவடிக்கை உண்மையானது அல்ல என்றும், யாரையோ திருப்திப்படுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக எம்.பி-யும், ப.சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணத்தால் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமால் ஜோடிச்ச வழக்கை உருவாக்கி, அந்தச் சம்பவங்கள் எல்லாம் 2008ஆம் ஆண்டு நடந்ததாக கூறுகிறார்கள். அதற்காக 2017ஆம் ஆண்டு, அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறார்கள். அதன்பின்னர் 4 முறை சோதனை நடத்திவிட்டார்கள். இருபது முறை எனக்கு சம்மன் அனுப்பிவிட்டார்கள். 

ஒவ்வொரு சம்மனுக்கும் நான் 10 மணி நேரம் அவர்களுக்கு முன் ஆஜராகினேன். சிபிஐ-யின் விருந்தாடியாக 11 நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால் இதுவரையிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே இது ஒரு உண்மையான நடவடிக்கையாக தெரியவில்லை. இது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. என் தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com