ராஜஸ்தான்: ஜாமீனில் வெளிவந்து அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

ராஜஸ்தான்: ஜாமீனில் வெளிவந்து அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்
ராஜஸ்தான்: ஜாமீனில் வெளிவந்து அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற கைதி ஒருவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட அதே சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையடுத்து சிறுமியை காணாமல் பெற்றோர் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார். இதனையடுத்து, கர்தானி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த கைதிக்கு எதிராக இதே சிறுமி அளித்த புகாரின் பேரில் 2 கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. முந் வழக்கில் அந்த நபரை போலீசார் கைது செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com