தன்பாலின தோழியுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு அனுமதி அளித்து ஒடிசா நீதிமன்றம் உத்தரவு

தன்பாலின தோழியுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு அனுமதி அளித்து ஒடிசா நீதிமன்றம் உத்தரவு
தன்பாலின தோழியுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு அனுமதி அளித்து ஒடிசா நீதிமன்றம் உத்தரவு

ஒடிசா உயர்நீதிமன்றம், 24 வயதான ஒரு பெண்ணை தன் பாலின துணையான மற்றொரு பெண்ணுடன் வாழ அனுமதித்துள்ளது.  அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவரது விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆணை திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

சின்மய் ஜீனா என்கிற சோனு கிருஷ்ணா ஜீனா தனது பெண் இணையை மீட்டுத் தரக்கோரி அரசியலமைப்பின் 226 மற்றும் 227 வது பிரிவின் கீழ்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.  மனுதாரர் தனது இணையின் தாயும், மாமாவும் இப்போது அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.மிஸ்ரா மற்றும் நீதிபதி சாவித்ரி ரத்தோ ஆகியோர் அடங்கிய  அமர்வு, அந்தப் பெண்ணின்  இணைக்கு பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

ஒரு மனநல மருத்துவரிடமிருந்து  திருநம்பிக்கான பாலின டிஸ்ஃபோரியா சான்றிதழை தயாரித்த ஜீனா, 2011 ஆம் ஆண்டிலிருந்து அவரும் அவரது கூட்டாளியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், 2017 முதல் ஒருமித்த உறவை அனுபவித்து வருவதாகவும் கூறியிருந்தார். இருவரும் ஒரே  கல்லூரியில் படித்து வந்தனர். பின்னர் படிப்பை முடித்த ஜீனா புவனேஸ்வரில் ஒரு தனியார் வேலை பெற்று, நகரத்தில் வாடகைக்கு தங்கியிருந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது இணையுடன் ஒன்றாக தங்கியிருந்தபோது, அவளின் தாயும், மாமாவும் வந்து தங்களின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக ஜீனா கூறினார். காணொலி காட்சி மூலம் நடந்த விசாரணையின் போது, மனுதாரருடன் உடனே தாமதமின்றி  சேர விரும்புவதாக  அவரின் இணை நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

மனுதாரர் தனது  இணையுடன் சேர அவரின் தாய் மற்றும் சகோதரி அனுமதிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி  அந்த மனுதாரருடன் சேர அனைத்து உரிமைகளும் அந்த பெண்ணுக்கு இருக்கிறது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com