ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு வீட்டுச்சிறை

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு வீட்டுச்சிறை
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு வீட்டுச்சிறை

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு ஆணைய கருத்துருவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி, சிபிஎம் தலைவர் முகமது யூசஃப் தாரிகாமி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு கூட ஜம்மு காஷ்மீர் அரசு அனுமதியளிக்காதது மிகவும் கண்டனத்துக்குரியது என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com