மாநிலங்களவையில் இடைவிடாமல் ஒலித்த ’வெட்கக்கேடு! வெட்கக்கேடு!’ முழக்கம்

மாநிலங்களவையில் இடைவிடாமல் ஒலித்த ’வெட்கக்கேடு! வெட்கக்கேடு!’ முழக்கம்
மாநிலங்களவையில் இடைவிடாமல் ஒலித்த ’வெட்கக்கேடு! வெட்கக்கேடு!’ முழக்கம்

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து மாநிலங்களவையில் வெட்கக்கேடு என்ற கோஷத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து எழுப்பினர். 

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.  அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 370-ஐ நீக்குவது குறித்தும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரையும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கையும் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்காததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் எதிர்கட்சிகள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ’வெட்கக்கேடு, வெட்கக்கேடு’ என முழக்கங்களை எழுப்பினர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com