மணிப்பூர் விவகாரம்: 8-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி; அவை ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்றும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com