வெங்காயம் விலை அதிகரிக்கும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வெங்காயம் விலை அதிகரிக்கும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வெங்காயம் விலை அதிகரிக்கும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு எச்சரிக்கை பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நியாயமான விலையில் மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும்படியும், மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. விலையை செயற்கையாக உயர்த்துவதற்காக வெங்காயத்தை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

வியாபாரிகள் எவ்வளவு வெங்காயத்தை இருப்பில் வைக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயம் விலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com