24 ஆம் தேதி உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டிய ஓமன்

24 ஆம் தேதி உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டிய ஓமன்

24 ஆம் தேதி உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டிய ஓமன்
Published on

வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வரும் 24 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் 26 ஆம் தேதி மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய கடற்கரையை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் தீவிர, அதிதீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயர்சூட்டப்படும். இது ஓமனால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும். புயலால் தமிழகத்திற்கு நேரடியாக வாய்ப்பு இல்லை. மாறாக வெப்பநிலையை அதிகரித்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 24 மணிநேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதனைஒட்டியுள்ள வங்கக்கடல்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் அதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com