ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ரயில் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் பலரும் 3 ரயில்கள் எப்படி ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கியிருக்கும் எனக் குழம்பிப் போயிருந்தனர். இந்தச் சூழலில் விபத்து நடந்தது எப்படி என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.