ஆணுறை, கருத்தடை மாத்திரை வழங்கும் ஒடிசா அரசு: அதுவும் புதுமண தம்பதிகளுக்கு.. ஏன் தெரியுமா?

ஆணுறை, கருத்தடை மாத்திரை வழங்கும் ஒடிசா அரசு: அதுவும் புதுமண தம்பதிகளுக்கு.. ஏன் தெரியுமா?
ஆணுறை, கருத்தடை மாத்திரை வழங்கும் ஒடிசா அரசு: அதுவும் புதுமண தம்பதிகளுக்கு.. ஏன் தெரியுமா?

புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மருந்துகள், ஆணுறைகள் உள்ளிட்ட முக்கிய இல்லறம் சார்ந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை ஒடிசா அரசு சார்பில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசின் பரிவார் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நயி பாஹல் அல்லது நபாதம்பதி என்பதன் பேரிலான தொகுப்பைதான் புதுமண தம்பதிகளுக்கும், குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்ள நினைக்கும் தம்பதிகளுக்கும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.

அந்த தொகுப்பில், ஆணுறை, கருத்தடை மருந்துகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான இடைவெளி குறித்த கையேடு, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவை அடங்கியிருக்கும். மேலும் இந்த ஒவ்வொரு தொகுப்பிலும் இரண்டு துண்டுகள், ஒரு நெயில்கட்டர், கண்ணாடி, சீப்பு, கைக்குட்டையும் இணைத்து கொடுக்கப்படும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் பிஜய் பானிக்ராஹி இது தொடர்பாக பேசுகையில், “குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வலுப்படுத்த இந்த தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுமண தம்பதிகளுக்கு இந்த கிட் வழங்கப்பட உள்ளது என்றும், இந்த திட்டம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com