டானா புயல்
டானா புயல்pt web

முழுமையாக கரையைக் கடந்த டானா புயல்... உயிர்சேதம் இல்லாததால் ஒடிசா முதலமைச்சர் மகிழ்ச்சி

டானா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என ஒடிசா முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Published on

டானா புயல் முழுமையாக கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்ததால், ரயில், விமானப் போக்குவரத்து சீராகியுள்ளது. மாநில அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஞ்சி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மோகன் சரண் மாஜி
முதலமைச்சர் மோகன் சரண் மாஜிpt web

தீவிர புயலாகவே டானா கரையைக் கடந்தாலும், புரி ஜெகன்நாத்தின் அருளாளும், அனைத்து துறையினரின் கடுமையான உழைப்பாலும் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக மாஞ்சி குறிப்பிட்டுள்ளார். காற்றின் வேகம் முற்றிலும் குறைந்ததால், மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்படும் பணி நடந்து வருகிறது.

டானா புயல்
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெள்ளம் முற்றிலும் வடியும் வரை முகாம்களிலேயே மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com