துறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்

துறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்

துறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்
Published on

ஒடிசாவில் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள்‌ குறித்து மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பீஜபூர் மற்றும் ஹின்ஜிலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

2 தொகுதிகளில் பீஜபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹின்ஜிலி தொகுதியின் எம்.எல்.ஏவாக மட்டும் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பெற்றுள்ளார். 

இந்நிலையில், ஒடிசா முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை‌கள் குறித்து மாதந்தோறும் 7ஆம் தேதிக்குள் அமைச்சர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நவீன் ‌பட்நா‌யக் உத்தரவிட்டுள்ளா‌ர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com