வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றம் !

வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றம் !
வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளி நேரம் மாற்றம் !

ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரங்களை மாற்றி ஒடிசா அரசு அம்மாநில பல்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. 

இந்தாண்டு வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இந்த சூழலில் காற்றில் ஈரப்பதும் குறைந்துள்ளது. மேலும் வானில் மேக மூட்டங்கள் அதிகம் காணப்படாததால் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டீகிரியை தாண்டியுள்ளது. அது போல ஒடிசாவிலும் கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசாவில் வெயில் சுட்டெரித்து வருவதால், பள்ளி நேரத்தை அம்மாநில அரசு மாற்றியமைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக  ஒடிசா மாநில அரசு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அதில் பள்ளி நேரத்தை மாற்றி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும், 11 மணிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் பள்ளிகள் இயங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கே மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com