எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்

எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்

எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்
Published on

ஒடிஷாவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் இருந்து 6 பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டு, எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரத்துக்கு சென்றது.

ஒடிசாவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று தமரா பகுதியில் இருந்து கிளம்பியிருக்கிறது. ரயில் காந்தபாடா மற்றும் பஹானாகா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது எதிர்பாராதவிதமாக ரயிலின் கடைசி 6 பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டானது. இந்த 6 பெட்டிகளும் எஞ்சின் இல்லாமல் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு சென்று நின்றுள்ளது. இருப்பினும் ரயில் பெட்டிகள் எஞ்சின் இல்லாமல் ஓடியதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7ம் தேதி அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 22 பெட்டிகள் பயணிகளுடன் என்ஜின் இல்லாமல் சுமார் 13 கி.மீ தூரம் சென்று நின்றது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் சரக்கு ரயிலின் பெட்டிகள் என்ஜின் இல்லாமல் ஓடியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com