வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபருடைய பெயரை நீக்கும் போது முன்னதாகவே சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கங்களை பெற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனு மீது பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தேவ சகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் நீக்கப்படுவதாகவும் இது கடுமையான குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் இந்த விவகாரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு இது தொடர்பான விவரங்களை தெரிவிப்பதுடன் அவரது பதிலையும் கேட்டு பெற ஏதுவாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான அமரும் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com