3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடியை நன்கொடையாக பெற்ற தன்னார்வ அமைப்புகள்

3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடியை நன்கொடையாக பெற்ற தன்னார்வ அமைப்புகள்
3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடியை நன்கொடையாக பெற்ற தன்னார்வ அமைப்புகள்

இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் 49 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை பெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் இந்தியாவில் 18,377 அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து 2017-2018ஆம் ஆண்டு 16,940 கோடி ரூபாயும், 2018-2019ஆம் ஆண்டு 16,525கோடி ரூபாயும், 2019-2020 ஆம் ஆண்டு 15,853 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்சட்டத்தின் படி , அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெற டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கி பிரதான கிளையில் இதற்கான தனி கணக்கு திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com