கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்தார்
இது தொடர்பாக பேசிய முன்னாள் ஐ.சி.எம்.ஆர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர், கோவிட் -19 செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
டெய்லி மெயில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வில், சீனர்கள் வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸை உருவாக்கியதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.