கணவன்-மனைவி பிரச்னையில் மூன்றாவது நபர் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் விவாகரத்து நடைபெறுவது தொடர்பாக சக்திவாகினி என்ற அமைப்பு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அந்த மனுவில், கணவன்-மனைவி பிரச்னையில் வெளிநபர்கள் தலையிடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவற்றால் தவறான வழிகாட்டுதல் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கணவன்-மனைவி பிரச்னையில் மூன்றாவது நபர் தலையிடுவது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என தெரிவித்தது. மேலும் பிரச்னை எதுவாயினும் அதை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.