முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!

முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!
முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என இரு கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் சட்டப் பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் பேசினார். அப்போது, "அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை சரியாக செயல்படதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சியினரை விமர்சிக்காமல் சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்னைகளை தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோ” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டாலும் புதுச்சேரி அரசியலில் இந்த விவகாரம் நீறு பூத்த நெருப்பாகதான் இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com