எல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி

எல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி
எல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி

13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழக்கில் சிக்கி லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 

நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்படுகிறது.  நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் பிறப்பித்து‌ள்ளது.

இந்நிலையில் லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற  நிரவ் மோடி அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌இங்கிலாந்தி‌ன் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் 8‌0 கோடி ரூபாய் மதிப்பிலா‌ன சொகுசு வச‌திகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 ‌படுக்கையறைகள் கொண்ட நிரவ் மோடி வசிப்பதாக டெலிகிராப் கூறியுள்ளது. இந்த வீட்டின்‌ மாத வாடகை சுமார் 16 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.‌ 

இந்நிலையில் மேற்கு லண்டன் பகுதியின் சாலையில் சென்று கொண்டிருந்த நிரவ் மோடியிடம் தங்கள் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு நிரவ் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையே மும்பை அருகே கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த ரூ.40 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் பங்களா, நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com