இறந்தவர்களின் உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, இது தற்கொலையாக இருக்கலாம். எனினும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றார் தீக்ஷித். அத்துடன், இறந்த குடும்பத்தினர் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த பலரிடமும், உறவினர்கள் பலரிடமும் நிறைய கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர்களுக்கு கடன் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.