காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் அதிரடி சோதனை!

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் அதிரடி சோதனை!
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் அதிரடி சோதனை!

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து காஷீமீரில் பிரிவினைவாத தலைவர்க ளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையை காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவருமான யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் அவரை தடுப்புக்காவலில் வைத்தனர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் 12 நிர்வாகி களையும் போலீசார் கைது செய்தனர். காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள் ளனர். ஸ்ரீநகரில் உள்ள மைசுமாவில் அவரது வீடு இருக்கிறது. அங்கு இன்று அதிகாலை சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரைத் தொடர்ந்து மற்றொரு பிரிவினைவாதத் தலைவரான அகமது கான் உட்பட 12 பேர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதனால் அவர் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com