போதிய ஆதாரங்கள் இல்லை -  4 பேர் மீதான என்.ஐ.ஏ வழக்கு வாபஸ் 

போதிய ஆதாரங்கள் இல்லை -  4 பேர் மீதான என்.ஐ.ஏ வழக்கு வாபஸ் 

போதிய ஆதாரங்கள் இல்லை -  4 பேர் மீதான என்.ஐ.ஏ வழக்கு வாபஸ் 
Published on

பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 14 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கருதி கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவர்கள் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாக கூறி தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.

இந்நிலையில் என்.ஐ.ஏ கைது செய்த 14 பேரில் முகமது இர்ஷாத், ரயீஸ் அகமது, சையத் மாலிக் மற்றும் முகமது அசாம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இவர்கள் அனைவரும் ஆறு மாத சிறை வாசத்திற்குப் பிறகு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கைதான மற்ற 10 பேர் மீது என்.ஐ.ஏ பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், “இவர்கள் பத்து பேரும் வெடிப் பொருட்கள் தயாரிப்பது மற்றும் டெல்லியில் பயங்கரவாத செயல் நடத்த திட்டம் தீட்டியது ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com