தமிழகம், கர்நாடகாவில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்கள் பறிமுதல்

தமிழகம், கர்நாடகாவில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்கள் பறிமுதல்
தமிழகம், கர்நாடகாவில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்கள் பறிமுதல்

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சார்ந்த மின்னணு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த காஜா மைதீன், அப்துல் சமத், சையது அலி நிவாஸ், ஜாபர் அலி ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு, ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக தமிழகம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 10 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சேலம், கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 16 சிம்கார்டுகள், இணையசேவை பயன்பாட்டுக்கு உதவும் டாங்கில்கள், பயங்கரவாத அமைப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கர்நாடகாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைதான அல்ஹந்த் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு மற்றும் கோலார் மாவட்டத்தில் உள்ள 15 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 செல்போன்கள், சிம் கார்டுகள், மடிக்கணினி மற்றும் மின்னணு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com