8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவின்பேரில், 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த விவரங்கள் பின்வருமாறு:

  • கர்நாடக ஆளுநராக தவார்சந்த் கெலாட்;
  • மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல்;
  • மிசோராம் ஆளுநராக ஹரிபாபு,
  • ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத்;
  • கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை;
  • திரிபுரா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா;
  • ஜார்க்கண்ட் ஆளுநராக ரமேஷ் பயஸ்
  • ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஸ்ரீதரன் பிள்ளை மிசோரமிலிருந்து கோவாவுக்கும், சத்யதே நாராயண் ஆர்யா ஹரியானாவிலிருந்து திரிபுராவுக்கும், ரமேஷ் பயஸ் திரிபுராவிலிருந்து ஜார்க்கண்டுக்கும்; பண்டாரு தத்தாத்ரேயா ஹிமாச்சலிலிருந்து ஹரியானாவுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com