நேரு நினைவு அருங்காட்சியக பெயரை மாற்றிய மத்திய அரசு! வலுக்கும் கண்டனங்கள்!

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமானது “பிரதமரின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரில் டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கட்டப்பட்டது. கடந்த ஜூன் மாதம் என்.எம்.எம்.எல். சொசைட்டியின் துணைத் தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், வளாகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் Twitter

அதன்படி, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரானது “பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்” என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் இந்தப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சிறுமைத்தனமான, சர்வாதிகார அணுகுமுறையைக் காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நேருவையும் அவரது பாரம்பரியத்தையும் அழிப்பது மட்டுமே மோடி அரசின் செயல்திட்டம்” என கடுமையாகச் சாடி உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com