பீகார் மாநிலத்தில் உள்ள 60 கொரோனா நோயாளிகளில் அதாவது மூன்றில் ஒரு பங்கு, அம்மாநில சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தில் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டம் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் உள்ளது. இதுவே கொரோனா நோய்க்கான மையப் பகுதியாக விளங்குகிறது. கடந்த மாதம் ஒமனிலிருந்து திரும்பிய ஒருவரிடம் இந்தத் தொற்று நோய் சங்கிலி போல் பரவத் தொடங்கியுள்ளது.