“கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்” - கேரள முதல்வருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

“கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்” - கேரள முதல்வருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

“கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்” - கேரள முதல்வருக்கு மகளிர் ஆணையம் கடிதம்
Published on

பாலியல் வன்கொடுமை புகாரில் பிஷப் பிராங்கோ முல்லக்கலுக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேரள முதல்வருக்கு தேசிய மகளிர்  ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

ஜலந்தர் மறை மாவட்ட தேவாலய பேராயர், பிராங்கோ முல்லக்கல். கேரளாவைச் சேர்ந்த இவர் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் இருக்கும் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். கேரளா வந்திருந்த அவர், 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவருடன் தங்கியிருந்த 5 கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒரு கன்னியாஸ்திரிக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டயம் தேவாலய நிர்வாகம், மற்ற நான்கு பேரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. 

இந்த இடமாற்றத்தை ஏற்காத அந்தக் கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து அதே தேவாலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேவாலய நிர்வாகம் கூறியது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கவும், தங்களுக்குப் பாதுகாப்பு கோரியும் முதல்வர் பினராயி விஜயனுக்கு, கன்னியாஸ்திரிகள் அனுபமா, வி.ஜோசபின், அல்பி, அஞ்சிட்டா ஆகியோர் கடிதம் எழுதினர். தங்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருக்கிறது. தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், வழக்குப் பாதிக்கும் என்றும் எங்களை பிரித்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவே இப்படி செயல்படுவதாகவும் அதில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றினை இன்று எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், பாதிரியால் பிராங்கோ முல்லக்கலுக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பெண்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு கேட்டு நீனா ரோஸ் மற்றும் ரனித் பல்லஸ்செரில் என்ற இரண்டு கன்னியாஸ்திரிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதை ஆணையம் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com