"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு

"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு

சமீபத்தில் 39 வயதான ஒரு நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்தார். அந்த நீதிபதி, ``பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை தொடுதல், தாக்குதல் நடத்தல் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளை தொடவைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது பாலியல் வன்கொடுமை ஆகும்" என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

போக்சோ சட்டத்தின் தன்மை குறித்து மும்பை உயர் நீதிமன்றம் வெளியிட்ட கருத்து தற்போது பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. பலர் தீர்ப்பை எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய பெண்கள் ஆணையம் (NCW) இந்தத் தீர்ப்பு தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள NCW தலைவர் ரேகா சர்மா, ``இந்த தீர்ப்பு பொதுவாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு விதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், அனைத்து பெண்களையும் கேலிக்கு உள்ளாக்குகிறது. மேலும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தால் வழங்கப்பட்ட சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல், இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மூர்க்கத்தனமான மற்றும் அருவருப்பானவை என்று சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் செயலாளர் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், ``இது மூர்க்கத்தனமான தீர்ப்பு. POCSO சட்டம் பாலியல் தாக்குதலை மிகத் தெளிவாக வரையறுக்கிறது. இது முழுமையான குப்பை மற்றும் இது பொது அறிவின் சோதனையிலும் தோல்வியடைகிறது. என்னைப் பொறுத்தவரை, பாலினம் தொடர்பான வழக்குகளில் யார் நீதிபதியாக இருக்க தகுதியுடையவர் என்பது ஒரு பெரிய கேள்வி எழுகிறது" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

``ஒரு நீதிபதியிடமிருந்து "குற்றவாளிகளை ஊக்குவிக்கும்" இதுபோன்ற தீர்ப்புகளை கேட்பது ஏமாற்றமளிக்கிறது. மிகவும் பிற்போக்குத்தனமானது என்று நான் நினைக்கிறேன்" என்று People Against Rape in India (PARI) அமைப்பின் தலைவரான யோகிதா பயானா கூறி இருக்கிறார்.

"இந்தச் சட்டம் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பற்றி பேசுகிறது. இந்த விளக்கம் சரியாக இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். இந்தச் சட்டத்தின் விளக்கத்தில் முரண்பாடுகள் இருந்தால், குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனையுடன் சட்டத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். எனவே, அது கூட பின்பற்றப்படவில்லை" என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் துணை இயக்குனர் பிரபாத்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com