ncert corrections on social science textbook class 8 new book
NCERTx page

முகலாயர் கால வரலாறு.. 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் NCERT திருத்தம்!

டெல்லி சுல்தானியர் மற்றும் முகலாயர் காலத்தில் மத சகிப்பின்மை இருந்த பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
Published on

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அடிக்கடி பாடத் திட்டம் நீக்கம் சம்பந்தமாகச் சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்ததும் அதற்கு முன்பு, ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் இந்தியில் பெயர் இடம்பெற்றிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் டெல்லி சுல்தானியம் மற்றும் முகலாயர் காலத்தில் மத சகிப்பின்மை இருந்த பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ncert corrections on social science textbook class 8 new book
ncertx page

இந்த வாரம் வெளியிடப்பட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் முதல் பாகமான 'சமூகத்தை ஆராய்தல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்' என்ற புத்தகம், நடப்பு கல்வி அமர்வுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. NCERT-யின் புதிய பாடப்புத்தகங்களில், டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம் இதுவாகும். முந்தைய ஆண்டுகளில், இந்தப் பாடப்பகுதி 7-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், புதிய பாடத்திட்டத்தின்படி டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள் ஆகியோரைப் பற்றிய இந்திய வரலாறு இனி 8 ஆம் வகுப்பில் மட்டுமே கற்பிக்கப்படும் என்று NCERT தெரிவித்துள்ளது.

ncert corrections on social science textbook class 8 new book
7ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகம்.. முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கம்!

இதற்கிடையே, புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல், டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் காலத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய புத்தகம் பாபர், அக்பர் மற்றும் ஒளரங்கசீப் போன்றோரின் ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த மத சகிப்பின்மை சம்பவங்களை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளது. புதிய பாடநூலில், ’பாபர் கொடூரமான மற்றும் இரக்கமற்ற வெற்றியாளர்’, ’நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்தவர்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்பரின் ஆட்சி கொடூரமும் சகிப்புத்தன்மையும் கலந்ததாகவும், ஒளரங்கசீப் கோயில்களையும் குருத்வாராக்களையும் அழித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய விளக்கங்கள், வரலாற்றின் சில இருண்ட காலங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன என்று NCERT தெரிவித்துள்ளது. மேலும், கடந்தகால நிகழ்வுகளுக்கு இன்று யாரும் பொறுப்பல்ல என்ற எச்சரிக்கைக் குறிப்பும் ஒரு அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ncert corrections on social science textbook class 8 new book
ncertx page

அதாவது, “நிகழ்வுகள் உண்மையில் நடந்தன மற்றும் இந்திய வரலாற்றில் தங்கள் முத்திரையை பதித்தன. அவற்றை உள்ளடக்கியதற்கான காரணம் 'வரலாற்றில் சில இருண்ட காலங்கள் பற்றிய குறிப்பு' என்பதில் விளக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட வரலாற்றுப் பதிவு, வரலாற்றைத் தூய்மைப்படுத்தவில்லை என்றாலும், சமநிலையானது மற்றும் முற்றிலும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், 'வரலாற்றில் சில இருண்ட காலங்கள் பற்றிய குறிப்பு' என்பதற்கு கூடுதலாக, கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்று யாரும் பொறுப்பேற்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்த, ஒரு எச்சரிக்கை குறிப்பு அத்தியாயங்களில் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான முக்கிய பாடங்களை அதிலிருந்து கற்றுக்கொள்ளும் நோக்குடன் வரலாற்றை நேர்மையாக அணுகுவதே இங்கு முக்கியத்துவம். புதிய பாடப்புத்தகங்கள் NEP 2020 மற்றும் NCF-SE 2023 ஐ பிரதிபலிக்க வேண்டும் என்பது முக்கியம்; அவை முற்றிலும் புதிய அணுகுமுறையை மட்டுமல்லாமல், புதிய பாடத்திட்டம், புதிய வடிவமைப்பு மற்றும் புதிய கற்பித்தல் கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டவை. பழைய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களுடன் எந்த ஒப்பீடும் பயனற்றது" என்று NCERT தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ncert corrections on social science textbook class 8 new book
ஆங்கில பாடப்புத்தகங்களில் இந்தி பெயர்.. சர்ச்சையில் சிக்கிய NCERT!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com