\
கோத்ரா கலவரம் பிரதமருக்கு தொடர்பில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

கோத்ரா கலவரம் பிரதமருக்கு தொடர்பில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

கோத்ரா கலவரம் பிரதமருக்கு தொடர்பில்லை: நீதிமன்றம் அறிவிப்பு
Published on

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தின் பின்னணியில் பெரும் சதி ஏதுமில்லை எனக்கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோத்ரா கலவர பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும், அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு அதில் பங்குண்டு எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், அதனை எதிர்த்து மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜாபிரி என்பவரின் மனைவி ஜாபியா குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
கலவரத்தின் பின்னணியில் பெரும் சதி இல்லை என்றும், அதற்கும் பிரதமருக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த தீர்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com