புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.