பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை

பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை
பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இஸ்லாமியர், பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த பால் விவசாயி கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்ட அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த உமர்கான் என்பவர் அவரது உதவியாளர் தஹிர் கான் என்பவருடன் 4 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள காத்மிகா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, உமர்கானின் வாகனத்தை சிலர் வழிமறித்து அவரையும், உதவியாளரையும் தாக்கியுள்ளனர். பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், உமர்கானை சுட்டுக் கொன்றனர். படுகாயத்துடன் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், உமர்கானின் சடலத்தை அருகில் உள்ள ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். ரயில் பாதையில் இருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அல்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

உமர்கானின் சடலத்தை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாக்குதல் நடத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக உமர்கானின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தப்பிச் சென்ற உதவியாளர் தஹிர்கான் பெராஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com