முத்தலாக் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துவோம்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

முத்தலாக் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துவோம்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

முத்தலாக் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துவோம்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்
Published on

கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகும்போது முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது என்று கணவருக்கு மதகுருமார்கள் அறிவுறுத்த வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்துவோம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது, “திருமணம் நடத்திவைக்கும்போதே மதகுருமார்கள் மணமகனிடம், கருத்து வேறுபாடு ஏற்படும் போது மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். ஏனெனில் ஷரியத் சட்டப்படி அவ்வாறு விவாகரத்து செய்வது விரும்பத்தகாத நடைமுறை, என்று வலியுறுத்துவது அவசியம் என்ற ஆலோசனையை ‘குவாஜிகளுக்கு’ அளிப்போம், என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com