\
ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்
Published on

மும்பையில் இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் தொங்கியபடியே ஆபத்தான நிலையில் பயணம் செய்த காட்சி வெளியாகியுள்ளது. 

மும்பை உள்ளூர் ரயில் பயணத்தின் போது இளைஞர்கள் சிலர் படியில் தொங்கியபடியும், ரயில் நகர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு கடக்கும் ஆபத்தான செயலிலும் ஈடுபட்டுள்ளனர். சில இளைஞர்கள் ஜன்னலின் வெளிப்புறத்தில் தொங்கியபடி சிறிது நேரம் பயணித்துள்ளனர். 

இந்தப் பயணத்தின்போது அவர்கள் செல்ஃபியும் எடுத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோ காட்சியை அடிப்படையாக கொண்டு, தொடர்புடைய இளைஞர்கள் யார்யார் என்பது குறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com