மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் 19 பேர் இறந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி இதுவரை மொத்தம் 748 பேர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதில், 433 பேர் மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் மலபார் ஹில்ஸ், பெடார் சாலை, வோர்லி மற்றும் தாதர் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் 109 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.