\
பழைய வழக்கை தூசுதட்டிய போலீசார்.. அர்னாப் கோஸ்வாமி கைது..!

பழைய வழக்கை தூசுதட்டிய போலீசார்.. அர்னாப் கோஸ்வாமி கைது..!

பழைய வழக்கை தூசுதட்டிய போலீசார்.. அர்னாப் கோஸ்வாமி கைது..!
Published on

அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் அதிரடியாய் நுழைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

2018ம் ஆண்டு இருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாபிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 2019ம் ஆண்டு அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தூசுதட்டப்பட்ட நிலையில் தற்போது அவரை விசாரணைக்கு அழைத்துச்செல்ல போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே மும்பை போலீசார் தன்னை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com