இந்தியா
போதைப் பொருள் வழக்கு: ஷாரூக் கான் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
போதைப் பொருள் வழக்கு: ஷாரூக் கான் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் மீது வழக்குபதிவு செய்யபட்டது. ஆர்யன் கான் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து 3 நாட்கள் காவல் முடிந்ததும் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது என்.சி.பி.
இந்நிலையில், நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட ஆர்யன் கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.