மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு மக்களவையில் கனிமொழி பேச்சு

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது, “1996-ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர ஏன் இவ்வளவு காலதாமதம்? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக பலமுறை நான் கேள்வி எழுப்பியும் இதுவரை பதில் தரப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பதில் தெரிவிக்கவில்லை; ஆனால் எங்கள் முன்உள்ள கணினியில் திடீரென தகவல் வந்தது எப்படி? எப்போது மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும்?” என்றார்.

மேலும், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் வரிகளைக் குறிப்பிட்டும் பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com